மரணத்தைப் பற்றி எழுதியதாலோ...
மரணத்தைப் பிடிக்கும் என்று சொன்னதாலோ...
தவறாக எண்ணி விடாதீர்கள்,
நான் சொன்னது பொதுவான மரணம் அல்லது என் மரணம்.
அடுத்தவர் மரணத்தைக் கொண்டாடாதீர்கள் - எதிரியாயினும் கூட
அதைவிடக் கேவலம் வேறு என்ன..
நாய், நரியா நாம்..? மனிதர்களன்றோ !
மரணத்தைப் பற்றி சிந்தியுங்கள்
பயந்து நடுங்கிட ஒன்றும் இல்லை,
ஜஸ்ட் ஒரு ப்ரமோஷன் - அவ்வளவு தான்...
மிக இலகுவானது
மிக உன்னதமானது
மிக மிக புனிதமானது - பிறப்பை விட !
மரணத்தை யோசித்தால், மரண பயம் போகும் -
பயம் போனால், ஆசை குறையும் -
ஆசை குறைந்தால், தானம் பெருகும் -
தானம் பெருகினால், தவறு குறையும் -
தவறு குறைந்தால், உழைப்பு ஓங்கும் -
உழைப்பு ஓங்கினால், நோய் நீங்கும் -
நோய் நீங்கினால், வீடு செழிக்கும்.
இதுதானே வேண்டும்..?
இதற்குள் தானே அடக்கம் -
பணம், புகழ், போகம் எல்லாம்..?
இதற்குத்தானே இத்தனை ஆட்டமும்..?
இதைவிட வேறென்ன வேண்டும்...
சராசரி ஆயுள் 55ல்..?
மரணத்தின் விளிம்பில் இருப்போரிடம்
பேசிப்பாருங்கள் -
தவறுகள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும்..
உற்றோர் மீதான அக்கறை வழிந்தோடும்..
பார்வையிலேயே கருத்துக்கள் பரிமாறப்பட்டு
கண்ணீர் கரைபுரளும்..
மன்னிப்புகள் வழங்கப்படும், கேட்கப்படும்..
கிட்டத்தட்ட ஞானிகளைப் போன்ற நிலை அது !
யோகம், தியானம், இறைவன், -
எல்லா வெங்காயமும் நமக்குள்ளே அடக்கம் ;
நாமே கடவுள் - ஸ்தூலமாய் !
ஸ்தூலமே ஓளியாக !
ஒளியே - மரணம் !
இணைப்பு :
கவிஞர் திரு.வைரமுத்து அவர்கள் திருப்பூர் மின் மயானத்தில் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு - கண்டிப்பாக கேட்கப்பட வேண்டிய ஒன்று.
உரையைக் கேட்பதற்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும் :
மரணத்தைப் பிடிக்கும் என்று சொன்னதாலோ...
தவறாக எண்ணி விடாதீர்கள்,
நான் சொன்னது பொதுவான மரணம் அல்லது என் மரணம்.
அடுத்தவர் மரணத்தைக் கொண்டாடாதீர்கள் - எதிரியாயினும் கூட
அதைவிடக் கேவலம் வேறு என்ன..
நாய், நரியா நாம்..? மனிதர்களன்றோ !
மரணத்தைப் பற்றி சிந்தியுங்கள்
பயந்து நடுங்கிட ஒன்றும் இல்லை,
ஜஸ்ட் ஒரு ப்ரமோஷன் - அவ்வளவு தான்...
மிக இலகுவானது
மிக உன்னதமானது
மிக மிக புனிதமானது - பிறப்பை விட !
மரணத்தை யோசித்தால், மரண பயம் போகும் -
பயம் போனால், ஆசை குறையும் -
ஆசை குறைந்தால், தானம் பெருகும் -
தானம் பெருகினால், தவறு குறையும் -
தவறு குறைந்தால், உழைப்பு ஓங்கும் -
உழைப்பு ஓங்கினால், நோய் நீங்கும் -
நோய் நீங்கினால், வீடு செழிக்கும்.
இதுதானே வேண்டும்..?
இதற்குள் தானே அடக்கம் -
பணம், புகழ், போகம் எல்லாம்..?
இதற்குத்தானே இத்தனை ஆட்டமும்..?
இதைவிட வேறென்ன வேண்டும்...
சராசரி ஆயுள் 55ல்..?
மரணத்தின் விளிம்பில் இருப்போரிடம்
பேசிப்பாருங்கள் -
தவறுகள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும்..
உற்றோர் மீதான அக்கறை வழிந்தோடும்..
பார்வையிலேயே கருத்துக்கள் பரிமாறப்பட்டு
கண்ணீர் கரைபுரளும்..
மன்னிப்புகள் வழங்கப்படும், கேட்கப்படும்..
கிட்டத்தட்ட ஞானிகளைப் போன்ற நிலை அது !
யோகம், தியானம், இறைவன், -
எல்லா வெங்காயமும் நமக்குள்ளே அடக்கம் ;
நாமே கடவுள் - ஸ்தூலமாய் !
ஸ்தூலமே ஓளியாக !
ஒளியே - மரணம் !
இணைப்பு :
கவிஞர் திரு.வைரமுத்து அவர்கள் திருப்பூர் மின் மயானத்தில் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு - கண்டிப்பாக கேட்கப்பட வேண்டிய ஒன்று.
உரையைக் கேட்பதற்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும் :
| வைரமுத்து உரை |

